10 29
இலங்கைசெய்திகள்

வடக்கின் பனை சார் உற்பத்தி பொருட்கள் தொடர்பில் புதிய ஏற்றுமதி திட்டம்

Share

வடக்கின் பனை சார் உற்பத்தி பொருட்கள் தொடர்பில் புதிய ஏற்றுமதி திட்டம்

வடக்கு மாகாணத்தில் இருந்து சுமார் 3500 மில்லியன் ரூபா பெறுமதியான பனைசார் உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவதற்கான திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த காலங்களில் பனை அபிபிருத்தி சபை எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியாத சூழ்நிலையில் அதனை நான் பொறுப்பெடுத்த நிலையில் பல்வேறுபட்ட அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகிறேன்.

2025ஆம் ஆண்டு வடக்கிலிருந்து 3500 மில்லியன் ரூபா வருமானத்தை எதிர்பார்த்து பனை சார் உற்பத்தி பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சுமார் 3000 மில்லியன் ரூபாய்க்கான கோரிக்கைக் கடிதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் எமது பனை இயற்கை பாடத்திற்கான சிறந்த சந்தை வாய்ப்புகள் கிடைக்கும் நிலையில், ஏற்றுமதி மூலம் அதிக இலாபத்தை ஈட்ட முடியும்.

பனை வளம்சார் உற்பத்திகளுடன் 95 ஆயிரம் பேர் ஈடுபட்ட நிலையில், அவர்களின் தேவைப்பாடுகள் மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யாத காரணத்தினால் குறித்த உற்பத்தித் துறை தற்போது 5 ஆயிரம் பேர் வரை சுருக்கப்பட்டுள்ளது.

ஆகவே, எதிர்வரும் வருடம் பனை சார் உற்பத்தி பொருட்கள் மூலம் இலங்கை மொத்த தேசிய வருமானத்துக்கு பங்களிப்பு செய்யும் வகையில் எமது திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது“ எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...