21 1
இலங்கைசெய்திகள்

மீண்டும் நெருக்கடி! இன்றைய எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

Share

மீண்டும் நெருக்கடி! இன்றைய எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

மேலும், வார இறுதி நாளான இன்றும் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்று கூட்டுத்தாபனத்தின் தலைவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தகவல் அளித்துள்ளார்.

நேற்று முன்தினம் முதல் நாட்டில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.

எனினும், நேற்றையதினம் இரவுடன் எரிபொருள் வரிசை ஓரளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, எரிபொருளுக்கான வரிசை மீண்டும் ஏற்பட்டுள்ளது என்ற பிரசாரத்தை அறிந்து கொண்ட அதிகளவான மக்கள் எரிபொருள் நிலையங்களை நோக்கி படையெடுத்ததால் நிலைமை இன்னும் தீவிரமடைந்தது.

இதேவேளை, கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது உரையாற்றிய, இலங்கை பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பிரதித் தலைவர், தங்களுடை பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டில் எரிபொருளுக்கான பற்றாக்குறை அதிகமாக இருக்கும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...