6 26
இலங்கை

வாக்களிப்பின் போது வாக்குச்சீட்டை படம் எடுத்த முன்னாள் இராணுவ சிப்பாய் கைது

Share

வாக்களிப்பின் போது வாக்குச்சீட்டை படம் எடுத்த முன்னாள் இராணுவ சிப்பாய் கைது

இன்றையதினம் வாக்களிப்பில் ஈடுபட்ட ஒருவர் அதனை புகைப்படம் எடுத்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலி(galle) மாவட்ட, மித்தியகொட காவல்துறை பிரிவிற்குட்பட்ட தெல்வத்த சுமணராம விகாரையின் வாக்களிப்பு நிலையத்தில்இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஹிக்கடுவ தெல்வத்த போயகொட வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.

வாக்களிப்பு நிலையத்திற்கு இன்று காலை வந்த அவர், தனது வாக்குச்சீட்டை பெற்றுக்கொண்டு வாக்களித்த பின்னர், அதனை புகைப்படம் எடுக்கும் போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை வாக்களிப்பு நிலையத்திற்குள் கைபேசியை கொண்டு செல்வதற்கும் வாக்குச் சீட்டினை புகைப்படம் எடுப்பதற்கும் தேர்தல் ஆணைக்குழு தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 227
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் புதிய தீர்வுத்திட்ட வரைபு: ஈழத் தமிழர் பொதுச்சபை அதிரடி ஆரம்பம்!

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை எட்டும் நோக்கில், தமிழ்த் தேசத்தின் இறைமை...

world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...