7 27
இலங்கை

தேர்தலை முன்னிட்டு நாட்டில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசேட பாதுகாப்பு திட்டங்கள்

Share

தேர்தலை முன்னிட்டு நாட்டில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசேட பாதுகாப்பு திட்டங்கள்

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ (Nihal Taltuwa)தெரிவித்துள்ளார்.

சுமூகமான மற்றும் பாதுகாப்பான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக சுமார் 63,000 காவல்துறை உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினருக்கு மேலதிகமாக முக்கிய பாதுகாப்பு இடங்களில் முப்படையினரைச் சேர்ந்த பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதை பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

ஒழுங்கு மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்குத் தேவையான மேலதிகப் பணியாளர்களை ஈடுபடுத்துவதற்கு ஆயுதப் படைகள் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பாதுகாப்பு நடவடிக்கைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.

இதேவேளை, தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் வன்முறை வெடித்தால் அது கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்(Tiran Alles) இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 227
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் புதிய தீர்வுத்திட்ட வரைபு: ஈழத் தமிழர் பொதுச்சபை அதிரடி ஆரம்பம்!

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை எட்டும் நோக்கில், தமிழ்த் தேசத்தின் இறைமை...

world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...