tamilni 87 scaled
இலங்கைசெய்திகள்

சந்தேகநபர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு கைது

Share

சந்தேகநபர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு கைது

40இற்கும் மேற்பட்ட குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் சந்தேகநபரொருவர் யாழ். பருத்தித்துறையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நேற்றிரவு தொடக்கம் பொலிஸார் தீவிரமாக தேடிவந்த நிலையில் இன்றையதினம் (09.10.2023) கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரது வீட்டினை பொலிஸார் சுற்றிவளைத்த போது சந்தேகநபர் பருத்தித்துறை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரியை கத்தியால் குத்த முற்பட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபர் மீது காலிற்கு கீழ் துப்பாக்கிச்சூடு நடத்தி காயம் ஏற்படுத்தி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் சந்தேகநபர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...