tamilni 87 scaled
இலங்கைசெய்திகள்

சந்தேகநபர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு கைது

Share

சந்தேகநபர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு கைது

40இற்கும் மேற்பட்ட குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் சந்தேகநபரொருவர் யாழ். பருத்தித்துறையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நேற்றிரவு தொடக்கம் பொலிஸார் தீவிரமாக தேடிவந்த நிலையில் இன்றையதினம் (09.10.2023) கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரது வீட்டினை பொலிஸார் சுற்றிவளைத்த போது சந்தேகநபர் பருத்தித்துறை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரியை கத்தியால் குத்த முற்பட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபர் மீது காலிற்கு கீழ் துப்பாக்கிச்சூடு நடத்தி காயம் ஏற்படுத்தி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் சந்தேகநபர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...

592732937 1280508897442061 4469225105931887604 n
இலங்கை

அனர்த்த நிவாரண நிதியாக ரூ. 100 இலட்சம் நன்கொடை: இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் ஜனாதிபதிச் செயலரிடம் கையளிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக,...

images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...