கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் வனவிங்குகளை கொல்ல அனுமதி!!

mahinda amaraweera 6756

பயிர்களை அழிக்கும் குரங்குகள், மயில்கள், முள்ளம்பன்றிகள் மற்றும் காட்டுப்பன்றிகள் போன்றவற்றை கொல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உருளைக்கிழங்கு விவசாயிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் வன விலங்குகள் கொல்லப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக வனவிலங்குகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதாகவும் விவசாயிகள் இதன்போது அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.

இதன்படி, குரங்குகள், மயில்கள், ராட்சத அணில், முள்ளம்பன்றிகள், காட்டுப்பன்றிகள் போன்ற விலங்குகள் அழிந்து வரும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

#SriLankaNews

Exit mobile version