tamilni 66 scaled
இலங்கைசெய்திகள்

தேசிய விமான நிலைய விஸ்தரிப்பு: சர்ச்சைக்குரிய சீன நிறுவனத்துக்கு அனுமதி

Share

தேசிய விமான நிலைய விஸ்தரிப்பு: சர்ச்சைக்குரிய சீன நிறுவனத்துக்கு அனுமதி

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், புதிய முனையத்தை நிர்மாணிப்பதற்கான கேள்விக்கொள்முதல் மேன்முறையீட்டு சபை மற்றும் அமைச்சகம் வழங்கிய முடிவின்படி, சர்ச்சைக்குரிய இலங்கை – சீன கூட்டு நிறுவனத்திற்கு(ஜேவி) வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை – சீனா கூட்டு நிறுவனமானது உள்ளூர் நிறுவனமொன்றையும், வெளிநாட்டு நிறுவனமானமொன்றையும் இணைத்து செயற்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், செயலாளரின் கூற்றுப்படி, இறுதி ஒப்புதல் அமைச்சரவையின் முடிவு மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்தது என தெரிவித்துள்ளார்.

எனவே இந்த முடிவுகள் சிலவேளைகளில் தற்போதைய முடிவுகளை மாற்றக்கூடும் என்று அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக விமான நிலையத்தில் இந்த புதிய வசதியை நிர்மாணிப்பதற்கான ஏலங்கள், 2023 டிசம்பர் 4ஆம் திகதியன்று கோரப்பட்டன.

இதன் அடிப்படையிலேயே தற்போதைய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த முனைய கட்டுமானம், ஏர்போர்ட் அண்ட் ஏவியேசன் சர்வீசஸ் (இலங்கை) லிமிடெட் மூலம் 2020 டிசம்பரில் ஜப்பான் இன்டர்நேசனல் கோஆப்பரேசன் ஏஜென்சி (ஜெய்கா) நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் பொருளாதார நெருக்கடியினால் அது இடைநிறுத்தப்பட்டது.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....