16
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளை எரிப்பது நியாயமானது: நாமல் தெரிவிப்பு

Share

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளை எரிப்பது நியாயமானது: நாமல் தெரிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களை தாக்கி அவர்களின் வீடுகளை எரிப்பது நியாயமானது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கட்சி என்ற ரீதியில் தாம் வலுவாக இருப்பதாகவும், இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி வகித்த போதும் சிலர் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்சக்கள் காரணமாக தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதிக்கு உதவுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தற்பொழுது ஜனாதிபதி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேசி தமிழ் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாட் பதியூதீன் போன்றோருக்கு பேசி உதவி பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

மொட்டு கட்சியின் சிங்கள பௌத்த வாக்கு அடிப்படையினால் தமிழ் முஸ்லிம் தரப்புக்கள் ஜனாதிபதியுடன் இணையவில்லை என குற்றம் சுமத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

தற்பொழுது அனைத்து தரப்பினருக்கும் பேசி அவர்களது ஆதரவினை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எண்ணிக்கை விளையாட்டில் ஈடுபட எம்மாலும் முடியும் எனவும் எனினும் அவ்வாறு செய்து அவர்களின் நிலைமைக்கு கீழே இறங்க நாம் விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலின் போது மக்கள் யாருடன் இருக்கின்றார்கள் என்பது தெரியவரும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் தொடர்பில் மக்களின் நிலைப்பாட்டை சில அரசியல்வாதிகள் உறுதிப்படுத்துகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் அரசியல்வாதிகளை தாக்கி வீடுகளை எரிப்பது நியாயமானது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 690416ca1b001
செய்திகள்இலங்கை

வானிலை அறிக்கை: சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இலங்கையின் சில பகுதிகளில் இன்று (அக்31) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...

25 6903a9422debc
செய்திகள்உலகம்

சீனா மீதான வரி 57% இலிருந்து 47% ஆகக் குறைப்பு: ட்ரம்ப் அறிவிப்பு – இரு நாட்டு உறவுகள் குறித்து ஜி ஜின்பிங் உறுதி

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற...

images
செய்திகள்இலங்கை

2024 மக்கள் தொகை கணக்கெடுப்பு: மொனராகலை மாவட்டத்தில் அதிகபட்ச எழுத்தறிவு

மக்கள் தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள 2024 மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகளின்படி, மாவட்டங்களுக்கிடையேயான...

25 6902b801c3b01
செய்திகள்இலங்கை

ஓடுதளம் தேவையில்லாத, AI-இயங்கும் உலகின் முதல் போர் விமானத்தை உருவாக்கியது அமெரிக்கா!

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஒரு தனியார் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய உலகின்...