நீர்கொழும்பு பிரதான வீதியில் எரிபொருள் கோரி மக்கள் மாபெரும் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
மக்களின் போராட்டம் காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் கப்புவத்தைப் பகுதி முடக்கப்பட்டது.
இதனால், வீதியின் இரு புறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியாத மக்கள் தமக்கு எரிபொருள் வழங்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொலிஸார் வந்து பெரும் சிரமத்தின் மத்தியில் நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.
#SriLankaNews
Leave a comment