16 7
இலங்கைசெய்திகள்

யாழ். கோண்டாவில் பூட்சிற்றிகளில் சிக்கிய வண்டுமொய்த்த பொருட்கள்

Share

யாழ். கோண்டாவில் பூட்சிற்றிகளில் சிக்கிய வண்டுமொய்த்த பொருட்கள்

யாழ்ப்பாணம் (Jaffna) – கோண்டாவில் பகுதிகளில் உள்ள பூட்சிற்றிகளில் (Food City) சுகாதார சீர்கேடுகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

கோண்டாவில் பொது சுகாதார பரிசோதகர் க. ஜெகானந்தன் கோண்டாவில் பகுதிகளில் உள்ள பூட்சிற்றிகளில் வண்டுமொய்த்த திகதி காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்து மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் நிர்மலானந்தனின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும், க. ஜெகானந்தன் தலைமையிலான குழுவினரால் குறித்த பூட்சிற்றிகள் (18.12.2024) தினம் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது, திகதி காலாவதியான பொருட்கள், வண்டு மொய்த்த பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரு பூட்சிற்றிகள் இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த பொருட்களை கைப்பற்றிய பொது சுகாதார பரிசோதகர் க. ஜெகானந்தன், பூட்சிற்றி முகாமையாளர்களிற்கு எதிராக நேற்றையதினம் (06.01.2024) வழக்கு தாக்கல் செய்தார்.

மேலும், வழக்கினை அன்றையதினமே விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான் முகாமையாளர்களிற்கு 60,000/=, 30,000/= தண்டம் விதித்து தீர்ப்பளித்ததுடன் கடுமையான எச்சரிக்கையையும் வழங்கியுளடளார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...