13 9
இலங்கைசெய்திகள்

மாகாணசபைத் தேர்தல் : வெளியான தகவல்

Share

மாகாணசபைத் தேர்தல் : வெளியான தகவல்

எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சி (LG) மன்ற தேர்தலுக்குப் பின்னர் மாகாண சபைத் தேர்தல்கள் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று குறிப்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் 2014 இல் ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கும், 2013 இல் வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கும், 2012 இல் கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் மாகாண சபை தேர்தல்கள், நடத்தப்பட்டன.

மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) – ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்தில் எல்லை நிர்ணய அறிக்கை நிராகரிக்கப்பட்டதன் காரணமாக, தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்தாண்டு காலத்துக்குப் பின்னர் முடிவடைவதற்கு காரணமான தேர்தல்கள் பிற்போடப்பட்டன.

கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தேர்தல்கள் மேலும் ஒத்திவைக்கப்பட்டன.

செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில், மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இன்னும் உறுதியான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெளிவுபடுத்தினார்.

தற்போதுள்ள அரசியலமைப்பின் படியே மாகாண சபைகள் தற்போது பராமரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்பில் மாகாண சபைகளின் எதிர்காலப் பாத்திரத்தை தீர்மானிப்பதற்கான பொது ஆலோசனைகளும் உள்ளடக்கப்படும் என்றும் கலாநிதி ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், புதன்கிழமை (4) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது, ​​ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake ), மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...