24 66262898f1bd6
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு விநியோகத்தில் பாரிய மோசடி : அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டு

Share

கடவுச்சீட்டு விநியோகத்தில் பாரிய மோசடி : அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டு\

வவுனியா (Vavuniya) கடவுச்சீட்டு அலுவலகத்தில் (Passport office) இலக்கம் பெறுவதில் இருந்து கடவுச்சீட்டு பெறும் வரையில் இலஞ்சம் பெறப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அத்துடன் கடவுச்சீட்டு அலுவலகத்தினுள்ளும் அதிகளவான பணத்தினை வழங்கி மிக இலகுவாக கடவுச்சீட்டை பெற முடியவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த மோசடி விவகாரம் தொடர்பில் மக்கள் மேலும் பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

வவுனியா குடியகல்வு குடிவரவுத் திணைக்களத்தில் (Vavuniya Immigration Department) கடவுச்சீட்டு பெறுவதற்காக வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மதவாச்சி போன்ற பிரதேசங்களில் இருந்து மக்கள் தினமும் அதிகளவில் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் ஒருநாள் கடவுச்சிட்டு மற்றும் சாதாரண கடவுச்சீட்டை பெறுவதற்காக வரும் மக்கள் அதிகாலையிலேயே இரு வரிசையில் காத்திருக்க வேண்டும்.

காத்திருப்போருக்கு காலை 6 மணியளவில் கடவுச்சிட்டு அலுவலகத்தால் இலக்கம் வழங்கப்பட்டு கடவுச்சிட்டு பெற வருவோர் உள்வாங்கப்படுவது வழக்கமாக உள்ளது.

இதன்போது, வரிசையில் இரவு பகலாக பலரும் காத்திருக்கும் நிலையில், ஒருவருக்கு தலா 5000 ரூபாவுக்கும் அதிகமான பணத்தினை பெற்று வரிசையில் காத்திருக்காமலேயே இலக்கங்கள் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு கடவுச்சிட்டு அலவலக காவலாளிகள் உட்பட அதிகாரிகள் வரை உடந்தையாக செயற்படுவதாகவும் பொலிஸாரும் அவர்களுக்கு உடந்தையாக உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...