articles2Fsg3YovunY1Ol61UAPsYE
அரசியல்இலங்கைசெய்திகள்

புயல் நிவாரணம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற அமர்வு: டிசம்பர் 18ஆம் திகதி கூட்டப்படுகிறது!

Share

சிறிலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசின் நாடாளுமன்ற அமர்வு அடுத்த வாரம் டிசம்பர் 18ஆம் திகதி காலை 9.30 மணிக்குக் கூட்டப்படும் எனச் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கோரிக்கைக்கு அமைய இந்த அமர்வுக்குச் சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 16இற்கு அமைவாகச் சபாநாயகரால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் (இலக்கம் 2466/33) நேற்று (டிசம்பர் 12) வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் வீசிய ‘டித்வா’ புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அண்மையில் பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோரிக்கையும் அமர்வு கூட்டப்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

Share
தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...