18 20
இலங்கைசெய்திகள்

இந்தியாவுக்கு செல்லும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Share

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட்ட குழு ஒன்று, இந்தியாவில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளது.

இதற்காக, 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள்; மற்றும் நான்கு மூத்த நாடாளுமன்ற அதிகாரிகள், இந்த வாரம் இந்தியாவுக்குச்(India) செல்லவுள்ளனர்.

புதுடில்லியில் உள்ள நாடாளுமன்ற ஆராய்ச்சி மற்றும் ஜனநாயக பயிற்சி நிறுவனத்தில் நடைபெறும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் இவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் தலைமையில் இந்தியா செல்லவுள்ள இந்தக் குழுவை, நேற்று கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா வரவேற்றார்.

2025 மே 26 முதல் 30 வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த திறன் மேம்பாட்டு திட்டத்தில், நாடாளுமன்ற மற்றும் பாதீட்டின்; நடைமுறைகள், நாடாளுமன்றக் குழு அமைப்புகள் மற்றும் நிர்வாக கட்டமைப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படவுள்ளன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை வந்திருந்தபோது அறிவித்த, இலங்கையின் 70 நிபுணர்களுக்கான பயிற்சி அறிவிப்பின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
10 29
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இருந்து தென்னிலங்கை சென்ற பேருந்து கோர விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

9 28
இலங்கைசெய்திகள்

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில், பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சங்கானை...

8 30
இலங்கைசெய்திகள்

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவிக்கு பிணை அனுமதி

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த...

6 31
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு சுற்றுலா செல்லும் தமது நாட்டவருக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கைக்கு சுற்றுலாவை மேற்கொள்ளும், தமது நாட்டவர்களுக்கு, பிரித்தானியா, நோய் அபாயத்துடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட பயண எச்சரிக்கையை...