tamilni 372 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

சிங்கள தலைமைகளின் சதி: நாடாளுமன்றில் சிறீதரன்

Share

சிங்கள தலைமைகளின் சதி: நாடாளுமன்றில் சிறீதரன்

இந்த நாட்டில் புரையோடிப் போயுள்ள தமிழ் – சிங்கள முரண்பாடுகளுக்கு கௌரவமான முறையில் தீர்வு காண்பதற்கு  சிங்கள தலைவர்கள் தவறியிருக்கின்றார்கள் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

எமக்குத் தீர்வு வழங்க வேண்டிய பல சந்தர்ப்பங்களில்  இந்த அரசாங்கத்தின் தலைமைகள் தட்டிக்கழித்திருக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தற்போது கொண்டு வரப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பது இந்த நாட்டிலே இருக்கின்ற அடக்குமுறைகளுக்குள் இதுவும் ஒரு வித்தியாசமான அடக்குமுறையாக மாறிவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் தோன்றியிருக்கின்றது.

இங்கே நான் புத்த பகவானின் ஒரு வாக்கியத்தை பதிவு செய்ய விரும்புகின்றேன். “நமக்கு முடிவு உள்ளது என்பதை இங்கு சிலர் அறிவதில்லை”. இது புத்த பகவான் தன்னுடைய மகுட வாக்கியங்களாக சொன்னவற்றில் ஒன்று.

நாங்கள் பல பேர் அவ்வாறு தான் இந்த பூமியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நமக்கு ஒரு முடிவு இருக்கின்றது இந்த பூமியிலே. நாம் செய்கின்றதெல்லாம் சரியா தவறா என்பதை புரிந்து கொள்ள முடியாமல் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என குறிப்பிட்டார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...