1 7 scaled
இலங்கைசெய்திகள்

மே மாதத்தில் கலைக்கப்படுமா நாடாளுமன்றம்..!

Share

மே மாதத்தில் கலைக்கப்படுமா நாடாளுமன்றம்..!

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடாத்தப்பட வேண்டும் எனில் இந்த வருடம் மே மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (12.03.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“இவ்வருடம் ஜீலை மாதத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு விடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

எனினும், தற்போது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக நாடாளுமன்றத் தேர்தலை நடாத்துவது குறித்து விவாதிக்கப்படுவதால் மே 13ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு குறித்த திகதிக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படவில்லை என்றால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தலை நடாத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.

மேலும், பாதீட்டில் 10 மில்லியன் ரூபா நிதி ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதால் இந்த வருடம் தேர்தலை நடாத்த நிதி இல்லை என அரசாங்கத்தால் கூற முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 224
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்வெல்ல வெவுருகன்னல விகாரையில் பழங்கால வாள் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை!

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெவுருகன்னல புடு ராஜ மகா விகாரையின் அருங்காட்சியகத்திலிருந்து...

world 223
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இளம் பெண் கொடூரக் கொலை: கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பரிதாப உயிரிழப்பு!

ஹட்டன், வெலியோயா எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவர், இன்று...