மட்டக்களப்பில் இளைஞன் உயிரிழப்பு: பொலிஸ் கைது குறித்து பெற்றோர் சந்தேகம் – வழக்கு பெப்ரவரிக்கு ஒத்திவைப்பு!

17651767372

மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கைது: ஒரு குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த 2025 டிசம்பர் 02-ஆம் திகதி குறித்த இளைஞன் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இளைஞன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

விளக்கமறியலில் இருந்தபோது திடீர் சுகவீனமுற்ற இளைஞன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளைஞனின் பெற்றோர் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

தனது மகனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே அவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகப் பெற்றோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இன்றைய நீதிமன்ற நடவடிக்கையின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இளைஞனின் தாய், “எனது மகனின் மரணத்தில் சந்தேகம் உள்ளது, எங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இன்றைய விசாரணைகளைத் தொடர்ந்து, வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27-ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

 

Exit mobile version