24 6650e3f36d4fb
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இருந்து அனுப்பப்படவுள்ள பாகிஸ்தானிய கைதிகள்

Share

இலங்கையில் இருந்து அனுப்பப்படவுள்ள பாகிஸ்தானிய கைதிகள்

இலங்கை அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் பின்னர், குறைந்தது 43 பாகிஸ்தான் கைதிகள் இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி இன்று அறிவித்துள்ளார்.

இலங்கை உயர்ஸ்தானிகர் ரவீந்திர சந்திர சிறிவிஜய் குணரத்னவுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள், நாடு திரும்புவதற்கு வசதியாக கடந்த ஒரு மாதமாக இலங்கை அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சகம் நெருக்கமாக ஒத்துழைத்ததாக நக்வி கூறினார்.

இந்த ஒப்பந்தத்தை இராஜதந்திர முயற்சிகளின் சாதகமான விளைவு என்று விபரித்த அவர், பாகிஸ்தான் கைதிகளை நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் சில நாட்களில் முடிவடையும் என்றும் கூறினார்.

Share
தொடர்புடையது
செய்திகள்இலங்கைஏனையவைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுமக்களின் கருத்துகளைக் கோரும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

2026-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான (ஏப்ரல் – ஜூன்) மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி...

01 11
செய்திகள்உலகம்பிராந்தியம்

மத்திய கிழக்கு கடல்வழிப் பதற்றம்: மேலும் மூன்று கப்பல்கள் மீது தாக்குதல்!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழலுக்கு மத்தியில், வளைகுடா பிராந்தியத்தின் கடல்வழிகளில் தாக்குதல்கள் தொடர்கின்றன....

30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...