Mahinda Rajapaksa
இலங்கைசெய்திகள்

சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதே எமது நோக்கம்! பிரதமர்

Share

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் சுற்றுலாத்துறையின் பங்கு அளப்பரியது. சுற்றுச்சூழல் மற்றும் கலாசாரம் சார்ந்த சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும்.

இவ்வாறு சர்வதேச சுற்றுலா தின செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொரோனாத் தொற்று நிலைமைக்கு மத்தியில் அதனை முகம்கொடுத்து வருகின்ற நாடு என்ற ரீதியில் நாம் பயணித்து வருகின்றோம்.

உலகின் பேண்தகு இலகுக்கு ஏற்ற வகையில் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிக்கின்றது. போர் நிறைவடைந்த பின் அமைதியான மற்றும் சுதந்திரமான சூழல் சுற்றுலாத்துறையின் வேகமான வளர்ச்சிக்கு பங்களித்தது.

எனினும் பின்னரான கொவிட் தொற்று காரணமாக சுற்றுலாத்துறை மற்றும் அதில் தங்கி வாழும் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

அதனால் இந்தப் பெருந்தொற்றை எதிர்கொள்ளும் சவாலை ஏற்றுக் கொண்டு அரசு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை துரிதப்படுத்தி வருகின்றது. அதனடிப்படையில் சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சூழலை நிர்மாணிப்பதே அரசின் நோக்கமாகும்.

‘ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான சுற்றுலாத்துறை’ என்ற தொனிப்பொருளுக்கு அமைய இம்முறை சர்வதேச சுற்றுலா தினதுக்கு நாம் மிகுந்த ஆர்வத்துடன் ஒன்றிணைவதுடன் நாட்டுக்கு சுற்றுலா வரும் அனைவருக்கும் பாதுகாப்பாக மற்றும் ஆரோக்கியமான பயண அனுபவத்தை பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1529934317 gun gunshot 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பத்தரமுல்லையில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு! – ஜீப் வாகனத்தில் இருந்த தம்பதியினர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை!

கொழும்பு – பத்தரமுல்லை, அக்குரேகொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர்...

25 679d968d808df
இலங்கைசெய்திகள்

18 ஆண்டுகால நீதிப் போராட்டம்: வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!

குடா வஸ்கடுவ பகுதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் படுகொலை தொடர்பான வழக்கில்,...

26 69858a214d488
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரசாயனப் பொருளை சுவாசித்த 19 பேர் பாதிப்பு! – மொரட்டுவை பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மொரட்டுவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையின் போது, வெளியேறிய இரசாயனப்...

1770972444 seine 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் 9-வது நாளாக மீனவர் போராட்டம்! – தீர்வு காண ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கொளுத்தும் வெயிலையும் பாரிய மழையையும் பொருட்படுத்தாது மீனவர்கள் முன்னெடுத்து...