அரசியல்இலங்கைசெய்திகள்

எமது நோக்கம் ஆட்சி மாற்றம் அல்ல! – ஐ.தே.க. தெரிவிப்பு

Share
அகிலவிராஜ் காரியவசம்
Share

“தேசிய வேலைத்திட்டத்தை உருவாக்குவதே எமது நோக்கம், மாறாக ஆட்சி மாற்றம் அல்ல” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியால் கொழும்பில் இன்று சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதேவேளை, நாட்டை மீட்டெடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரஞ்கே பண்டார தெரிவித்தார்.

“தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீளவேண்டுமெனில் அரசியல் பேதங்களுக்கு அப்பால், தேசிய கொள்கைத் திட்டங்களின் அடிப்படையில் செயற்பட வேண்டும். 20 ஆண்டுகள் வரை இணைந்து பயணிக்க வேண்டும். அதற்காக நாம் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்” என்றும் பாலித ரங்கே பண்டார மேலும் குறிப்பிட்டார்.

#SriLankaNewsUN

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...