3 5
இலங்கைசெய்திகள்

சுவீடன் யுவதியின் கொலை விவகாரம் : மைத்திரிக்கு எதிராக பிறப்பித்துள்ள உத்தரவு

Share

சுவீடன் யுவதியின் கொலை விவகாரம் : மைத்திரிக்கு எதிராக பிறப்பித்துள்ள உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட ரோயல் பார்க் கொலை குற்றவாளியான ஜூட் ஷ்ரமந்த ஜயமஹா தொடர்பில் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் குறித்து சட்டமா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான்(Tiran Alles ) அலஸ் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக நம்புவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

2005 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி ராஜகிரிய ரோயல் பார்க் வீட்டுத் தொகுதியில் யுவோன் ஜோன்சன் என்ற இலங்கை சுவீடன் யுவதியை கொடூரமான முறையில் படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவை விடுதலை செய்ய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த நீர்மானத்திற்கு அமைய உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

எனினும் இது அரசியலமைப்பிற்கு எதிரானது என கடந்த ஆம் திகதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் தந்தைக்கு தலா 10 மில்லியன் இழப்பீடு வழங்குமாறும் மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், குற்றம் சாட்டப்பட்ட ஜெயமஹா நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

மேலும், கொலைக் குற்றவாளியை மீண்டும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...