19 15
இலங்கைசெய்திகள்

எதிர்கட்சித் தலைவரின் தைத்திருநாள் வாழ்த்து செய்தி

Share

எதிர்கட்சித் தலைவரின் தைத்திருநாள் வாழ்த்து செய்தி

தைத்திருநாளை முன்னிட்டு அனைத்து மக்களுக்கும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தைத்திருநாளை முன்னிட்டு இன்றைய தினம் எதிர் கட்சி தலைவரால் வாழ்த்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டள்ளது.

குறித்த அறிக்கையில் “தைப்பொங்கல் என்கிற அறுவடைத் திருவிழா உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் கொண்டாடப்படும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகும்.

மரபு ரீதியாக அறுவடைக் காலத்தில் கொண்டாடப்படும் இந்த விழா நன்றியுணர்வு மற்றும் செழிப்புடன் தொடர்புடையது. தைப்பொங்கலின் உண்மையான பொருளை புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.

விவசாய வாழ்க்கை முறையில், ஒருவரின் பொருளாதாரத்தையும் வாழ்க்கையையும் வலுப்படுத்தி, பயிர்களை செழிப்பாக்க உதவிய சூரியன், மழை, இயற்கை மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம், நன்றி செலுத்துதல் என்ற பெரிய பாடம் கற்பிக்கப்படுகிறது, இதனை எதிர்கால சமுதாயத்தில் முறையாக உள்வாங்குவது நமது பொறுப்பாகும்.

ஒரு நாட்டின் மக்களுக்கான பொறுப்பை ஏற்றுள்ள ஆளும் கட்சிக்கு, பொதுமக்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவது என்பது, அந்த அதிகாரத்தை வழங்கிய மக்களுக்கு செலுத்தப்படும் நன்றி மற்றும் பொறுப்புணர்வின் வெளிப்பாடாகும் என்பதை தைப்பொங்கல் விழாவின் உட்பொருளை சரியாக புரிந்துகொள்வதன் மூலம் உணரலாம்.

ஆரம்பத்தில் விவசாய சமூகத்திற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த இந்த விழா, இன்று இன, மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து தமிழ் மக்களின் தேசிய விழாவாக மாறியுள்ளது.

பல்மத, பல்லின, பல்மொழி சமூகம் கொண்ட நமது தாய்நாட்டில், பன்முகத்தன்மையில் ஒற்றுமையை ஊக்குவிக்கும் மற்றொரு தேசிய விழாவாக தைப்பொங்கல் விழாவை ஒன்றிணைந்து கொண்டாடுவது நமது கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க உதவும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட தைப்பொங்கல் விழாவை கொண்டாடும் இலங்கை வாழ் சகோதர சகோதரிகளுக்கு பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்! ” என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share

Recent Posts

தொடர்புடையது
கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளது
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரபாகரன் போராட்டத்தை அழித்த ஜே.வி.பி.யினர் வடக்கு-கிழக்கில் காலூன்ற முயற்சிக்கின்றனர்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமைத்துவத்தில் இடம்பெற்ற விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கும், இன அழிப்பிற்கும்...

images 2 3
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரர் ‘தெஹி பாலே’க்கு சொந்தமான ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள 5 மீன்பிடி இழுவைப் படகுகள் பறிமுதல்!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “தெஹி பாலே” என்று அழைக்கப்படும் செஹான் சத்சாரவுக்கு சொந்தமானதெனக் கூறப்படும் ஐந்து...

Screenshot 2025 11 26 201240
இலங்கைசெய்திகள்

கரவெட்டி பிரதேச சபை ஏற்பாட்டில் மாவீரர்களுக்கு அஞ்சலி: முதல் கரும்புலி மில்லரின் தாயார் ஈகைச்சுடர் ஏற்றினார்!

கரவெட்டிப் பிரதேச சபையின் ஏற்பாட்டில், நெல்லியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர்...

25 692286ceb2572
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கனமழை காரணமாக தம்பலகாமத்தின் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின!

திருகோணமலை மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக, தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில்...