24 6600a86bee160
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தல்

Share

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தல்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்று மொட்டுக் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச கூறுகின்ற போதிலும் அந்தக் கட்சிக்குள் அதிகமானவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் உடன்பாடில்லை என்று அறியமுடிகின்றது.

அதற்குக் காரணம் அடுத்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியைச் சேர்ந்த பலர் தோல்வியடையப் போவது நிச்சயம்.

அப்படி தோல்வியடைந்தால் பலரது ‘ஓய்வூதிய திட்டம்’ கூட இல்லாமல்போகும். அவர்களது ஓய்வூதிய திட்டத்தையாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் நாடாளுமன்ற ஆயுட் காலம் முடிவடைந்த பின்பே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இதனால், அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தாது ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்துமாறு ஜனாதிபதிக்குத் தூது அனுப்பி வருகின்றார்கள் என்றும் தெரியவருகின்றது.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...