9 1
இலங்கைசெய்திகள்

உருளைக்கிழங்கு மற்றும் சீனி இறக்குமதியில் பெரும் மோசடி: சஜித் குற்றச்சாட்டு

Share

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் சீனி இறக்குமதியில் பெரும் மோசடி நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

பொலன்னறுவை – மின்னேரியவில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவையில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது சஜித் பிரேமதாச மேற்குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டஅவர், இந்த அரசாங்கம் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தவில்லை.

அதே போன்று உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்துக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி காரணமாக விவசாயிகளுக்கு எதுவித பிரதிபலனும் கிடைப்பதில்லை.

அவற்றுக்கு வரி விதிக்கமுன்னரே உருளைக்கிழங்கும், பெரிய வெங்காயமும் பெரும் தொகையாக இறக்குமதி செய்யப்படடு களஞ்சியப்படுத்தப்பட்டுவிட்டது.

விவசாயிகளின் பிரச்சினை மற்றும் யானை – மனித மோதல்களைத் தீர்ப்பதற்கான என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிப்பதே எங்கள் கட்சியின் நிலைப்பாடாகும் என்றும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் தலைவர் பிரபாகரன்! மகிந்தவை மையப்படுத்தி நாமல் கொடுத்த சாட்டையடி!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தனக்கும் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் உள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன...

24
இலங்கைசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணம் – அரியாலை, சித்துப்பாத்தி – செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு 13 ஆம் திகதிக்கு...

23
இலங்கைசெய்திகள்

இலங்கைக்குள் ஊடுருவி உள்ள ஆபத்தான நபர்! மக்களின் உதவியை நாடும் காவல்துறை

2016 ஆம் ஆண்டு இலங்கை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய ஹெரோயின் தொகையுடன் தொடர்புடைய பாகிஸ்தானியரைக்...

22
இந்தியாசெய்திகள்

ஆட்டத்தை ஆரம்பித்த திமுக – தவெக பொதுச் செயலாளரை கைது செய்ய தனிப்படை

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர்...