மாணவர்களுக்கு ஒரு டோஸ் மட்டுமே

மாணவர்களுக்கு ஒரு டோஸ் 2

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசியின் ஒரு டோஸ் மாத்திரமே வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்திக்கு தடுப்பூசியின் ஒரு டோஸ் மாத்திரம் போதுமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 18 மற்றும் 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கொவிட் ஒழிப்பு செயலணிக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது டோஸாக 6 மாதங்களின் பின் பைஸர் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version