Medicine
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

இரு மாதங்களுக்குத் தேவையான மருந்துகளே கையிருப்பில்!-

Share

நாட்டில் தற்போது இரு மாதங்களுக்குத் தேவையான மருந்துகளே கையிருப்பில் உள்ளது என இலங்கை ஒளடத இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒளடத இறக்குமதிக்கான முன்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், நாணயக் கடிதத்தைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒளடதங்களுக்கான தட்டுப்பாடு ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நாட்டில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் 80 சதவீதமானவை இறக்குமதி செய்யப்படுகின்றன எனத் தெரிவிக்கப்படும் அதேவேளை, தற்போது ஒளடதங்களுக்கான தட்டுப்பாடு இல்லை எனவும் கூறப்படுகிறது.

எனினும், இறக்குமதிக்கான தடைகளை உடனடியாக நீக்காவிடின், பல அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவும் என ஒளடத இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...