24 6644ceed24418
இலங்கைசெய்திகள்

புதிய இணைய சட்டத்தின் கீழ் யூடியூப் அலைவரிசை ஒன்றுக்கு எதிராக உத்தரவு

Share

புதிய இணைய சட்டத்தின் கீழ் யூடியூப் அலைவரிசை ஒன்றுக்கு எதிராக உத்தரவு

இலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவுக்கு (Vikum Liyanage) எதிராக அவதூறான தகவல்களை வெளியிட்ட யூடியூப் அலைவரிசை ஒன்றை தடுப்பதற்கான உத்தரவை புதிய இணைய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

குறித்த உத்தரவானது, இன்று (15.05.2024) கொழும்பு (Colombo) பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே, 2024ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் இராணுவத் தளபதிக்கு ஆதரவாக நிபந்தனையுடன் கூடிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அத்துடன், அந்த உத்தரவை பிரதிவாதிகளுக்குத் தெரிவிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

நாட்டின் தேசியப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில், தனக்கு எதிராக தீங்கிழைக்கும் மற்றும் அவதூறான காணொளி உள்ளடக்கங்கள் மற்றும் அறிக்கைகளை பிரதிவாதிகள் பதிவேற்றியதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், இணையச் சட்டத்தின்படி, குறித்த விடயத்துக்கு விளக்களிக்குமாறு பிரதிவாதி தரப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 224
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்வெல்ல வெவுருகன்னல விகாரையில் பழங்கால வாள் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை!

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெவுருகன்னல புடு ராஜ மகா விகாரையின் அருங்காட்சியகத்திலிருந்து...

world 223
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இளம் பெண் கொடூரக் கொலை: கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பரிதாப உயிரிழப்பு!

ஹட்டன், வெலியோயா எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவர், இன்று...