யாழில் கத்திகுத்துக்கு இலக்காகி இளம்குடும்பஸ்தர் பலி

tamilnih 109

யாழில் கத்திகுத்துக்கு இலக்காகி இளம்குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் என்கிற 36 வயதானவரே உயிரிழந்துள்ளார்.

இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி ஒருவர் மீது கத்திக் குத்து நடத்தப்பட்டது.

கத்திக் குத்துக்கு இலக்காகியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version