tamilni 308 scaled
இலங்கைசெய்திகள்

பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இரவில் ஏற்பட்ட பதற்றம்

Share

பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இரவில் ஏற்பட்ட பதற்றம்

குருணாகல், நாரம்மல பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று இரவு கடும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

பொலிஸாரின் உத்தரவை மீறி ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் லொறியை நிறுத்தி சோதனையிட்டபோது, ​​பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி இயங்கி சாரதி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் சாரதி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள், பொலிஸ் நிலையத்தின் முன்னிலையில் வன்முறையில் ஈடுபட்டனர். பொலிஸாரின் சொத்துக்களுக்கும் இக்குழுவினர் சேதம் விளைவித்துள்ளனர்.

நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழு மற்றும் பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நேற்றிரவு நாரம்மல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சிவில் உடையில் இருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்தப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதுடன், லொறி ஒன்றை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.

எனினும், அந்த உத்தரவை மீறி லொறியின் சாரதி ஓட்டிச் சென்றதையடுத்து இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் லொறியை துரத்திச் சென்று லொறியை நிறுத்தியுள்ளனர்.

சாரதியை பயமுறுத்துவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர் தனது பணித்துப்பாக்கியை எடுத்தபோது அது இயங்கி துப்பாக்கி சூட்டிற்கு இழக்காகி லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
2025 07 02T141641Z 2 LYNXMPEL610MU RTROPTP 4 HEALTH BIRD FLU
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் H5N5 பறவைக் காய்ச்சல் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு: 9 மாதங்களில் பதிவான முதல் மனித

அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில், H5N5 பறவைக் காய்ச்சல் (H5N5 Avian Influenza) தொற்றினால் ஏற்பட்ட சிக்கல்கள்...

ln1efiok top 10 luxury cities of
உலகம்செய்திகள்

2025 ஆம் ஆண்டின் உலகின் முதல் 10 ஆடம்பர நகரங்கள் பட்டியல் வெளியீடு: பிரான்ஸின் பரிஸ் முதலிடம்!

உலக அளவில், வெறும் செல்வத்தை மட்டுமல்லாமல், அதைச் செலவழிக்கும் விதம் மற்றும் அதனுடன் கூடிய வாழ்க்கை...

21113858ad4369b
செய்திகள்உலகம்

பாகிஸ்தான் தொழிற்சாலை வெடி விபத்து: கொதிகலன் வெடித்ததில் 16 தொழிலாளர்கள் பலி!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பைசலாபாத் நகரில் அமைந்த மாலிக்பூர் பகுதியில் உள்ள ஒரு பசை...

MediaFile 15
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம்: கடலட்டைப் பண்ணையைப் பார்க்கச் சென்ற 17 வயதுச் சிறுவன் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் – குருநகர் கடற்பரப்பில் இன்று (நவம் 22) காலை, கடலுக்குச் சென்றிருந்த நிலையில் காணாமல்...