9 48
இலங்கைசெய்திகள்

வெளிநாடொன்று விசாவிற்கு விதித்த தடை: இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

Share

வெளிநாடொன்று விசாவிற்கு விதித்த தடை: இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக ஓமானுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

சுற்றுலா விசாவை வேலைவாய்ப்பு விசாவாக மாற்ற முடியாது என்றும், சுற்றுலா விசாக்கள் மூலம் தனிநபர்கள் ஓமானில் வேலையில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, இலங்கையிலிருந்து வேலை தேடுபவர்கள் ஓமானில் சட்டப்பூர்வமான வேலைவாய்ப்பைத் தேடும்போது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தெளிவான அறிவுறுத்தல்கள் இருந்தபோதிலும், சுற்றுலா விசாக்களில் நாட்டிற்குள் நுழைந்த பிறகு, ஓமானில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஒக்டோபர் 31, 2023 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ராயல் ஓமான் காவல்துறையின் அறிவிப்பின்படி, சுற்றுலா விசாவை வேலைவாய்ப்பு விசாவாக மாற்றுவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் வேலை தேடுபவர்கள் சுற்றுலா விசாவில் ஓமானுக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, ஏற்கனவே ஓமானில் உள்ள இலங்கையர்கள் தங்கள் விசா காலாவதியாகும் முன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், விசா காலாவதியான பிறகு தங்கியிருப்பவர்கள், வெளியேறுவதற்கு முன் ஓமானில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் விதிக்கப்படும் கூடுதல் கட்டணங்களுக்குஉட்பட்டவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளைமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...