9 48
இலங்கைசெய்திகள்

வெளிநாடொன்று விசாவிற்கு விதித்த தடை: இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

Share

வெளிநாடொன்று விசாவிற்கு விதித்த தடை: இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக ஓமானுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

சுற்றுலா விசாவை வேலைவாய்ப்பு விசாவாக மாற்ற முடியாது என்றும், சுற்றுலா விசாக்கள் மூலம் தனிநபர்கள் ஓமானில் வேலையில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, இலங்கையிலிருந்து வேலை தேடுபவர்கள் ஓமானில் சட்டப்பூர்வமான வேலைவாய்ப்பைத் தேடும்போது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தெளிவான அறிவுறுத்தல்கள் இருந்தபோதிலும், சுற்றுலா விசாக்களில் நாட்டிற்குள் நுழைந்த பிறகு, ஓமானில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஒக்டோபர் 31, 2023 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ராயல் ஓமான் காவல்துறையின் அறிவிப்பின்படி, சுற்றுலா விசாவை வேலைவாய்ப்பு விசாவாக மாற்றுவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் வேலை தேடுபவர்கள் சுற்றுலா விசாவில் ஓமானுக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, ஏற்கனவே ஓமானில் உள்ள இலங்கையர்கள் தங்கள் விசா காலாவதியாகும் முன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், விசா காலாவதியான பிறகு தங்கியிருப்பவர்கள், வெளியேறுவதற்கு முன் ஓமானில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் விதிக்கப்படும் கூடுதல் கட்டணங்களுக்குஉட்பட்டவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளைமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...