18 18
இலங்கைசெய்திகள்

12 ஆண்டுகளாக வெள்ளை யானையாக மாறியுள்ள ஒலுவில் துறைமுகத்திட்டம்

Share

12 வருடங்களாக செயலற்றிருக்கும், அம்பாறை – ஒலுவில் துறைமுகத்திட்டத்தை மீண்டும் செயற்படுத்த முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனினும், அதற்கான சாத்தியமான வழிகளை கண்டுபிடிப்பதில் அரசாங்கத்தினால் தீர்மானம் ஒன்றுக்கு வரமுடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலுவில் துறைமுகத் திட்டத்துக்கான கடன் ஒப்பந்தம், டென்மார்க்கின் நோர்டியா வங்கிக்கும் இலங்கையின் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சகத்திற்கும் இடையே 2008 மே 23 அன்று, கையெழுத்தானது.

இதன்படி மொத்த திட்ட செலவு 46 மில்லியன் யூரோக்களாகும் இந்த திட்டம் 2013 இல் நிறைவடைந்தது. எனினும், துறைமுகம் இப்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது.

அத்துடன், துறைமுக நுழைவாயிலில் மணல் திட்டுகள் குவிந்து கிடப்பதால் கப்பல்கள் வரமுடியாமல் உள்ளதாக துறைமுகம் மற்றும் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனிதா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தற்போது ஒலுவில் துறைமுகத்தை எவ்வாறு மாற்றியமைக்க முடியும் என்பதை ஆராய்ந்து வருவதாக பிரதியமைச்சர் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 11
இலங்கைசெய்திகள்

அடுத்தவருடம் வெள்ளவத்தையில் நினைவேந்தல் செய்தால் யுத்தம் வெடிக்கும் : தேரர் எச்சரிக்கை

வெள்ளவத்தையில் நினைவேந்தலை அடுத்த வருடமும் அனுஸ்டிக்க விடாதீர்கள். அவ்வாறு நினைவேந்தல் செய்தால் மீண்டும் ஒரு யுத்தம்...

23 13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமென கூறி குழப்பம் விளைவித்த நபர் கைது

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்க வேண்டுமெனக் கூறி குழப்பம் விளைவித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது...

24 13
இலங்கைசெய்திகள்

சுவிஸ் பெண் உட்பட 2 வெளிநாட்டவர்களின் உயிரை காப்பாற்றிய அதிகாரிகள்

மாத்தறை, மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கடல் அலையில்...

22 14
இலங்கைசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ள புதிய வசதி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று (21) முதல் ஆரம்பிக்கப்படும்...