1 1
இலங்கைசெய்திகள்

யாழில் வீதியில் மயங்கி விழுந்த முதியவர் உயரிழப்பு

Share

யாழில் வீதியில் மயங்கி விழுந்த முதியவர் உயரிழப்பு

யாழில் (Jaffna) கடற்கரை வீதியில் மயங்கி விழுந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (01) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – ஈச்சமோட்டையை சேர்ந்த 75 வயதான க. கியூமர் என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார்.

குறித்த முதியவர், கடந்த 27ஆம் திகதி பிறந்தநாள் நிகழ்வு ஒன்றுக்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் கடற்கரை வீதியூடாக வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதன்போது, அவருக்கு திடீரென தலைச்சுற்று ஏற்பட்டு கீழே விழுந்துள்ள நிலையில் இரவு 8 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையிலேயே, சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் அவர் உயிரிழந்துள்ளதுடன் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இதற்கமைய, தலையில் அடிபட்டதாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரிய வந்துள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...