இலங்கைசெய்திகள்

க.பொ. த. சாதாரண தர மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Share
15 9
Share

க.பொ. த. சாதாரண தர மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கைகள் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி இன்று (10.12.2024) நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் விண்ணப்பிக்கும் நடவடிக்கைகள் நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சார்த்திகள் இணையவழி (Online)இல் பரீட்சைக்கு விண்ணப்பிக்க கடந்த நவம்பர் மாதம் 05 முதல் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

மேலும், “எந்த காரணத்திற்காகவும் இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் விண்ணப்பப் படிவங்களைப் பெற வாய்ப்பில்லை என்பதால், பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் அனைவரும் இன்றுக்குள் விண்ணப்பப் படிவங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் பரீட்சைக்கு நீங்கள் நள்ளிரவு 12 மணிக்கு முன் உங்கள் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்..” என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
20 7
உலகம்செய்திகள்

காசா மக்களுக்கு விழப்போகும் பேரிடி : காசாவின் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றும் இஸ்ரேல்

காசா (Gaza) பகுதியை முழுமையாகக் கைப்பற்றி, காலவரையின்றி அங்கு தங்கள் இருப்பை நிறுவும் திட்டத்தை இஸ்ரேலின்...

14 6
இலங்கைசெய்திகள்

தபால் வாக்குகள் தனியாக எண்ணப்பட மாட்டாது:வெளியான அறிவிப்பு

இன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது தபால் வாக்குகள் தனியாக எண்ணப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

13 6
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு

வவுனியாவில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளினை மீட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார்...

15 6
இலங்கைசெய்திகள்

வெலிக்கடை சிறைக்குள் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு

வெலிக்கடைச் சிறைச்சாலையின் கழிவுநீர் வடிகாண் ஒன்றின் அருகே இருந்து கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலையின் எல்...