15 9
இலங்கைசெய்திகள்

க.பொ. த. சாதாரண தர மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Share

க.பொ. த. சாதாரண தர மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கைகள் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி இன்று (10.12.2024) நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் விண்ணப்பிக்கும் நடவடிக்கைகள் நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சார்த்திகள் இணையவழி (Online)இல் பரீட்சைக்கு விண்ணப்பிக்க கடந்த நவம்பர் மாதம் 05 முதல் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

மேலும், “எந்த காரணத்திற்காகவும் இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் விண்ணப்பப் படிவங்களைப் பெற வாய்ப்பில்லை என்பதால், பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் அனைவரும் இன்றுக்குள் விண்ணப்பப் படிவங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் பரீட்சைக்கு நீங்கள் நள்ளிரவு 12 மணிக்கு முன் உங்கள் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்..” என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...