8 6 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகளுடன் கைது

Share

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகளுடன் கைது

கம்பஹா – மினுவாங்கொடை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை கொலை செய்யச் சென்ற ஐந்து பேர் கொண்ட குழுவை, கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிற்றூந்து மற்றும் இரு உந்துருளிகளில் பயணித்த சந்தேகநபர்களிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 2 கைக்குண்டுகள் மற்றும் 2 கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ஹீனடியன மகேஸ் என்ற பாதாள உலக நபரின் அறிவுறுத்தலின் பேரில், மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவர் மீது தாக்குதல் நடத்துவதற்காக தாம் சென்றதாக தெரிவித்துள்ளனர்.

ஹீனடியனா மகேஸ் என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி வர்த்தகர்களை இலக்கு வைத்து கப்பம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு முன்னர் பல தடவைகள் குறித்த வர்த்தகரிடம் கப்பம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...