24 667618f9b05eb
இலங்கைசெய்திகள்

தலைகீழாக பதவி முத்திரை பொறித்த அதிகாரி : சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஊடகவியலாளருக்கு விசாரணை

Share

தலைகீழாக பதவி முத்திரை பொறித்த அதிகாரி : சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஊடகவியலாளருக்கு விசாரணை

தனது பதவி முத்திரையை தலைகீழாக பொறித்து கடிதம் ஒன்றினை அனுப்பிய மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் த.உமாவினால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் முகநூலில் பதிவிட்ட ஊடகவியலாளர் சொர்ணலிங்கம் வர்ணனை காங்கேசன்துறை கணிணி பொலிஸ் பிரிவினர் வாக்குமூலம் ஒன்றினை பதிவு செய்வதற்காக அழைப்பு விடுத்துள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர், பதவி முத்திரையினை தலைகீழாக பொறிக்கப்பட்டமை தொடர்பில் ஆதாரப்பூர்வமாக தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் உமா பொலிஸ் கணிணி பிரிவிற்கு முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை ஊடகவியலாளர் சொர்ணலிங்கம் வர்ணனை வாக்குமூலம் வழங்க வருமாறு காங்கேசன்துறை கணிணி பொலிஸ் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

தலைகீழாக பொறிக்கப்பட்ட பதவி முத்திரை தொடர்பான கடிதம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பாரிய விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...