24 661eba984903a
இலங்கைசெய்திகள்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் தடங்கல்

Share

இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் தடங்கல்

தனியார் பத்திரப்பதிவுதாரர்களுடனான இலங்கையின் கடன் மறுசீரமைப்பு(Debt restructuring) பேச்சுவார்த்தையில் இரண்டு விடயங்களில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் தலைமைப் பணிப்பாளர் சாகல ரத்நாயக்க(Sagala Ratnayake) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “ஆலோசகர்களின் அறிவுறுத்தலின் பேரில் இரண்டு தரப்பினரும் இந்த ஆண்டு இரண்டு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.

இதன்போது கருத்து வேறுபாடுகள் உள்ள நான்கு பகுதிகள் அடையாளம் காணப்பட்டன.

பின்னர் பேச்சுவார்த்தைகளின் விளைவாக அவை இரண்டாகக் குறைக்கப்பட்டது. எனினும் அந்த விடயங்கள் எதுவென்பதை வெளிப்படுத்த முடியாது.

இதேவேளை இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பில், சீனாவுடனும்(China) இலங்கை ஒரு வெற்றிகரமான பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது.

இதன் அடுத்த கட்டமாக அந்த கடன்கொடுத்தோருடன் உடன்படிக்கைகள் செய்துக்கொள்ளப்படவுள்ளன” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...