24 6610acef43727
இலங்கைசெய்திகள்

முன்னாள் காதலனை பொலிஸாரிடம் சிக்க வைக்க இளம் தாதி

Share

கொழும்பின் (Colombo) புறநகர் பகுதியான பிலியந்தலையில் முன்னாள் காதலனை பொலிஸாரிடம் சிக்க வைக்க முயற்சித்த இளம் தாதி உட்பட குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் காதலன் குழுவொன்று வருகைத்தந்து தாக்குதல் மேற்கொண்டு அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டதாக தாதி ஒருவர் பெற்றோருடன் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும் அந்த முறைப்பாடு போலியானதெனவும் பொலிஸாரை தவறாக வழிநடத்தியதற்காகவும் தாதி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் முறைப்பாடு செய்த தாதி, அவரின் தாய், தந்தை மற்றும் உறவினரான பாடசாலை மாணவரும் அடங்குவதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறி தாதி அணிந்திருந்த சுமார் 3 லட்சம் ரூபா பெறுமதியான வளையல் மற்றும் தங்க நகைகள் என்பன அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதையடுத்து இரு பிரிவினரிடையே சண்டை ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் நிலையம் சென்ற தாதி மற்றும் குடும்பத்தினர் முன்னாள் காதலன் தாக்கிவிட்டு தங்கத்தை கொள்ளையடித்து விட்டு சென்றுவிட்டதாகவும் முறைப்பாடு செய்துள்ளனர்.

எனினும் குறித்த யுவதியிடமும் ஏனையவர்களிடமும் விசாரணை நடத்திய குற்றப்பிரிவு நிலைய பொறுப்பதிகாரி அவர்களின் வாக்குமூலங்கள் பொய்யானது என்பதை சில நிமிடங்களிலேயே உணர்ந்துள்ளனர்.

முன்னாள் காதலனை சட்டத்தின் முன் கொண்டுவருவதற்காகவே அவ்வாறு செய்ததாக தெரியவந்த நிலையில் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...