கனவு இளவரசர் சிதைந்துவிட்டார்– அரசு இடையூறு செய்யவில்லை என தேவானந்த சுரவீர பதில்!

25 6922b6d1700fb

ஒருங்கிணைந்த எதிர்கட்சிகளால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட நுகேகொடை கூட்டத்துக்கு அரசாங்கம் எவ்வித இடையூறும் செய்யவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.

நுகேகொட கூட்டத்தைச் சீர்குலைக்க அரசாங்கம் சதி செய்ததாகக் கூட்டு எதிர்க்கட்சி முன்வைத்த குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் விதமாகவே ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர் “ஐஸ்லாந்தின் கனவு இளவரசர் (Iceland’s Dream Prince) மீண்டும் ஒருமுறை சிதைந்து விட்டார் என்பதை நுகேகொட கூட்டம் வெளிப்படுத்தியது. ரணில் மற்றும் மஹிந்த போன்றவர்கள் மக்களால் தூக்கி எறியப்பட்டனர். எனவே, அரசியல் ரீதியாக வங்குரோத்து அடைந்தவர்களை மீண்டும் உயிர்த்தெழுப்ப முடியாது” என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

Exit mobile version