4
இலங்கைசெய்திகள்

அநுர தரப்புக்கு வாழ்த்தையும் கூறி மிரட்டலும் விடுத்துள்ள மொட்டுக் கட்சி

Share

அநுர தரப்புக்கு வாழ்த்தையும் கூறி மிரட்டலும் விடுத்துள்ள மொட்டுக் கட்சி

அடுத்த உள்ளூராட்சித் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்திக்கு பெருன்பான்மை கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சிறிலங்கா பொதுஜன பெரமுன இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையினரின் கருத்துக்கு அடிபணிவது ஜனநாயகம் என்றும், தேசிய மக்கள் சக்தி மீது மக்களுக்கு நம்பிக்கை இருப்பதால், அவர்கள் பணியை தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் கருத்தை ஏற்றுக்கொள்ளாத மக்களுக்காக சிறிலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக வாக்களித்தவர்களையும், வாக்களிக்கச் செல்லாதவர்களையும் ஒன்று சேர்க்கும் போது, ​​அங்குதான் பெரும்பான்மை உள்ளது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...