3
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத ஜீப் வாகனம் ஒன்று கண்டுபிடிப்பு: விசாரணையில் வெளியான பின்னணி

Share

சட்டவிரோத ஜீப் வாகனம் ஒன்று கண்டுபிடிப்பு: விசாரணையில் வெளியான பின்னணி

கொழும்பு – பொல்காசோவிட பிரதேசத்தில் கார் பழுதுபார்க்கும் இடமொன்றில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட லேண்ட் ரோவர் ஜீப் வாகனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் குறித்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகன பழுதுபார்க்கும் இடத்தின் உரிமையாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மஹரகம பிரதேச விகாரை விஹாராபதி ஒருவர் இந்த வாகனத்தின் உதிரிப்பாகங்களை வழங்கி சென்றதாக கூறியுள்ளார்.

அத்தோடு, வாகனத்தை திருத்துவதற்கான தேவையான உதிரிபாகங்களை உரிமையாளர் என கூறப்படும் விஹாராபதி அவ்வப்போது வந்து வழங்கி சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இந்த வாகனத்தை வழங்கியதாக கூறப்படும் விகாரை விஹாராபதியிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ​​குறித்த ஜீப் மேலதிக விசாரணைகளுக்காக கெஸ்பேவ காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....