15 14
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியிலும் விருப்பு வாக்கு அடிப்படை பின்பற்றப்படும்! கே.டி.லால்காந்த

Share

தேசிய மக்கள் சக்தியிலும் விருப்பு வாக்கு அடிப்படை பின்பற்றப்படும்! கே.டி.லால்காந்த

தேசிய மக்கள் சக்தியிலும் விருப்பு வாக்கு அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர் என கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

அண்மையில் கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியில் விருப்பு வாக்கு முறைமை கிடையாது என சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தலில் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் நாடாளுமன்றத் தெரிவு இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விருப்பு வாக்கு எண்ணிக்கை என்பது தேர்தல் சட்டம் எனவும் அதற்கு புறம்பாக செயற்படப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி தற்பொழுது பாரிய மக்கள் கட்சியாக உருப்பெற்றுள்ளது எனவும் கடந்த காலங்களில் சின்னத்திற்காக மட்டும் வாக்கு கேட்டதாகவும் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...