4 7
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியால் கைவிடப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க!

Share

தேசிய மக்கள் சக்தியால் கைவிடப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க!

முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, தேசிய மக்கள் சக்தியினால் கைவிடப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான ரஞ்சன் ராமநாயக்க, நீதிமன்ற அவமதிப்புக்குற்றச்சாட்டு காரணமாக நாடாளுமன்ற பதவியை இழந்து, நான்கு வருட சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார்.

எனினும் ரணில் விக்ரமசிங்க கடந்த 2022ஆம் ஆண்டு ஜனாதிபதியானவுடன் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.

எனினும் நீதிமன்றத்தினால் ஏழு வருடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்கவின் சிவில் உரிமையை மீண்டும் கிடைக்கவில்லை.

அதனை மீளப் பெற்றுக் கொடுத்து ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மீண்டும் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள வழி செய்து கொடுப்பதாக ரணில் விக்ரமசிங்க வாக்குறுதி அளித்திருந்த நிலையில், ரஞ்சன் ராமநாயக்க விடுதலையாகி சில வாரங்களுக்குள்ளாகவே தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளராக மாறிப் போயிருந்தார்.

இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அநுரகுமார திசாநாயக்க தனக்கு பூரண பொதுமன்னிப்பு வழங்கி இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்குவார் என்று ரஞ்சன் ராமநாயக்க உறுதியாக நம்பியிருந்தார்.

அது தொடர்பாக பல்வேறு பதிவுகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.

Share
தொடர்புடையது
23 6535db6a64ba7
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலையால் இலங்கையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிப்பு – ஐக்கிய நாடுகள் சபை கவலை!

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக...

articles2FRGAP8jR5fJmot12PYdxp
செய்திகள்இலங்கை

62 பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு நியமனம்: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு முன்னுரிமை!

இலங்கை சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 62 புதிய பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்கள்...

25 6950d161858e7
செய்திகள்உலகம்

சீனக் கிராமத்தில் வினோத சட்டம்: வெளியூர் திருமணம் மற்றும் குடும்பச் சண்டைகளுக்குப் பாரிய அபராதம்!

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லிங்காங் (Lincang) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம், திருமணம்...

FB IMG 1764515922146 818x490 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளி பாதிப்பு: 79 சதவீத தொடருந்து மார்க்க புனரமைப்புப் பணிகள் நிறைவு!

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட தொடருந்து மார்க்கங்களில் 79 சதவீதமான...