15 34
இலங்கைசெய்திகள்

ராஜபக்சர்களை கைது செய்தால் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படும்! சாடும் நாமல்

Share

ராஜபக்சர்களை கைது செய்தால் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படும்! சாடும் நாமல்

தம்மை கைது செய்து சிறையில் அடைத்து விட்டால் நாட்டில் பொருட்களின் விலைகள் குறையும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

எம்மை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வாக்குமூலங்களை பெற்றுக் கொள்ளவும் கைது செய்வதும் ஊடாக எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்து விடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இனி நாட்டில் பொருட்களின் விலைகள் குறைவடைந்து விடும் என்று அரசாங்கம் கூறுகிறது.

உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் தாம் மக்களுடன் இணைந்து அரசியலில் ஈடுபட போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க அமைச்சர்கள் ஊடகவியலாளர்களை சந்திப்பதில்லை எனவும் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளதாகவும், தம்மை மட்டுமன்றி அரசாங்க ஊழியர்களையும் அரசாங்கம் பழிவாங்குவதாகவும், இது ஓர் பிழையான அணுகுமுறை எனவும் நாமல் தெரிவித்துள்ளார்.

இராணுவ முகாமில் ஆயுதங்கள் காணாமல் போன விடயத்தை ஜனாதிபதி அரசியல் மேடையில் பேசுகின்றார், இது உண்மையில் பாதுகாப்பு பேரவையில் பேச வேண்டிய விடயம் என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டி உள்ளார்.

அரச இயந்திரத்தை அடக்கியும் பழிவாங்கியும் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...