இலங்கைசெய்திகள்

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு மனித கடத்தல் : இலங்கை கடற்படை அறிவித்தல்

24 663b10fa81648
Share

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு மனித கடத்தல் : இலங்கை கடற்படை அறிவித்தல்

இலங்கையின் முப்படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவத்தினரை ரஷ்யா (Russia) மற்றும் உக்ரைனுக்கு (Ukraine) அனுப்பும் மனித கடத்தல் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையின் ய்வுபெற்ற இராணுவத்தினர் உக்ரேனியப் படைகளுடன் இணைக்கப்பட்டு, குடியுரிமை உள்ளிட்ட பெரும் சலுகைகளைப் பெற்றுத் தருவதாக கூறி சுற்றுலா வீசா மூலம் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு ரஷ்யா-உக்ரைன் போரில் முன்னணி சண்டைகளுக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாரு ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு சுற்றுலா வீசா மூலம் கொண்டு செல்லப்படும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள், ரஷ்யா மற்றும் உக்ரைனில் செயல்படும் கூலிப்படைகளுக்கு நியமிக்கப்படுகின்றனர்.

மேலும், அவர்களுக்கு அதிக சம்பளம் அல்லது சலுகைகள் வழங்கப்படுவதில்லை எனவும் கடுமையான குளிர், குறைந்த வசதிகள் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத கடுமையான நிலைமைகளை அவர்கள் எதிர்கொள்வதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

மற்றும் அவர்களில் சிலர் போர் வலயத்தில் பலத்த காயம் அடைந்து அங்கு எந்தவித ஆதரவின்றி இறந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தாய்நாட்டுக்குப் பல ஆண்டுகளாகப் பெருமை சேர்த்து பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவ வீரராகச் சம்பாதித்த அனைத்துச் சலுகைகளையும், சொத்துக்களையும் இந்த மனித கடத்தலில் சிக்கி இழக்காமல், வெளிநாட்டு நிலத்தில் தங்கள் உயிரை இழக்கும் அபாயத்தை தவிர்க்க அனைத்து ஓய்வுபெற்ற கடற்படை வீரர்களுக்கும் கடற்படை வலியுறுத்துகிறது.

மேலும், இந்த மனித கடத்தலில் ஈடுபடுகின்ற நபர்கள், செயலில் உள்ள இராணுவத்தினர் அல்லது அதற்கு ஆதரவளிக்கும் ஏனையவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் கடற்படை தலைமையக தொலைபேசி இலக்கமான 0117192142 அல்லது 0117192250 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கடற்படை பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...