24 66358effaf76e
இலங்கைசெய்திகள்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு

Share

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு

2024 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 2771 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்பிற்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தாதியர், விவசாயம் மற்றும் கட்டுமானம் ஆகிய மூன்று துறைகளிலும் இலங்கையர்கள் இஸ்ரேலில் தொழில் வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

அதன்படி, தாதியர் தொழிலுக்கு 409 பேரும், கட்டுமானத் துறைக்கு 804 பேரும், விவசாயத் துறைக்கு 1558 பேரும் தெரிவாகியுள்ளனர்.

மேலும், மே மாதம் முதல் இரண்டு வாரங்களில் மேலும் 172 இலங்கையர்கள் இஸ்ரேலில் விவசாயத்துறையில் உள்ள தொழில் வெற்றிடங்களுக்காக செல்ல உள்ளனர்.

2023 ஆம் ஆண்டு 1912 இலங்கையர்கள் மாத்திரமே இஸ்ரேலில் தொழில் வாய்ப்பிற்காக சென்றுள்ளனர்,

இதன்படி இந்த வருடம் இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்பிற்காக செல்லும் இலங்கையர்களின் பெரும் வளர்ச்சியைக் காட்டுவதாக பணியகம் கூறியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...