கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான கட்டடங்கள் தொடர்பில் நடவடிக்கை

tamilni 261

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான கட்டடங்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பில் கால்வாய்களை அடைத்து சுமார் 500 சட்டவிரோத கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறித்த கட்டடங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறான பல நிர்மாணங்கள் நீரின் ஓட்டத்தை தடை செய்துள்ளன.

இதனால் கொழும்பு நகரில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

சில குடியிருப்புகள் நேரடியாக நீர்வழிகளைத் தடுக்கின்றன. மற்றவை கால்வாய்ப் படுகைகளில் கட்டப்பட்டுள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version