மின் தடை இல்லை
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மே 1, 3ஆம் திகதிகளில் மின் தடை இல்லை!

Share

எதிர்வரும் 1ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் மின்வெட்டை மேற்கொள்ளாதிருக்க மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

மே 1ஆம் திகதி தொழிலாளர் தினம் என்பதுடன், மே 3ஆம் திகதி புனித ரமழான் தினத்தை முன்னிட்டு இவ்வாறு மின்துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், 2ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்களும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாகவுள்ளது.

அவ்வாறே, கொழும்பு முன்னுரிமை வலயங்களில் (CC) காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணித்தியாலங்களும் மின் துண்டிப்பு இடம்பெறும் என்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...