மின்வெட்டு இல்லை!

3c322545 30b25ef6 kanchana wijeskera 850x460 acf cropped 1

பண்டிகை காலத்தை முன்னிட்டு சில நாட்களுக்கு மின்வெட்டை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சார அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அதன்படி, வரும் 24, 25, 26 ஆகிய மூன்று நாட்களில் மின்வெட்டு மேற்கொள்ளப்படாது என அமைச்சர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, 2022 டிசம்பர் 31 மற்றும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதிகளில் மின்வெட்டு மேற்கொள்ளப்படாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனவரி மாதத்தில் 2 மணித்தியாலங்கள் மற்றும் 20 நிமிடங்களுக்கு மாத்திரமே மின்வெட்டினை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version